Monday, September 20, 2010



வானமகள் போட்டு வைத்தது  போல் வட்ட நிலா....
 பல நாள் எதிர்பார்த்து இன்று பூத்த என் ரோஜா செடி....
தத்தி தத்தி  நடக்கும் குழந்தையின் பிஞ்சி பாதங்கள்....
பணியில் நனைந்து கொண்டிருக்கும் புல்வெளி....
துணை வேண்டி சத்தமிடும் தவளைகள்....
விளக்குகள் ஊர்வலம் செல்வது போல் வாகனங்கள்....
தெரு விளக்கையே சுற்றி சுற்றி வரும் ஈசல்கள்....
தேங்கி கிடக்கும்  தண்ணீரில்  மிதக்கும் உதிர்ந்த பூக்கள்....
தூரத்தில் கேட்க்கும் எனக்கு பிடித்த பாடல்....
என்னை சுற்றி இவ்வளவு இருந்தும்,
உன்னையே தேடும் என் விழிகள்.


என் மன்னா …
என் தோழா …
என் காதலா ..
என் தலைவனே ..
என் தாயாக ..
என் எல்லமுமாகிய …
இதில் எதை வைத்து தொடங்குவேன் 

என் கவிதையை ? 
எல்லாம்   பொருந்துகையில்  !!!


பூக்கள் படர்ந்த மெத்தைமீது

காத்துக்கொண்டிருந்தேன்,


உன் மெத்தையாய் மாற....


காதலில் சொர்கம் தெரியுமோ ?

ஒவ்வொரு முறையும் பார்க்கிறேனே


உன் விரல் படும் வேலைகளில் .......


உன் சுமை வலிக்கவில்லையடி  ..

இடைவெளியே வெகுவாக வலித்தது...