Thursday, December 31, 2009




மீசை வைக்கச் சொன்னாள்...

இதழ்கள் இடம்மாறிப் போகாமல் இருக்க .




என் உதடுகள் கடிந்துகொள்கிறது….

என்றும் என் இமைகளையே

நீ முத்தமிடுவதால்......





என்னில் எனக்கு  மிகவும் பிடித்தது 


"நீ ", என் காதல் !





தனிமை  – என்றும்  என்னை  விட்டு  நீங்காத  பெருந்துணை...





நான் காதலில் விழ

என்மேல் விழுந்தன

மலர் வளையங்கள்..




ஒவ்வொரு முறையும்

உன் பெயரை உரக்க அழைத்த பின்னரே

உணருகிறேன்........

நீ இங்கு இல்லையென.




அவன் என்னை பிரிந்ததும்

நாள்காட்டி நெருக்கமானது.........




காதல் வந்ததும்

தூக்கம் இன்றி தவித்தேன்...


அவன் திருமணம் ஆனதும்


தடையின்றி தூங்கினேன்...


என் கல்லறையில்.




மருந்தாக உன்னை நினைத்தேன்......

ஏனோ காயத்தை கொடுத்துச் சென்றாய்...!!!

Monday, December 28, 2009




உன் நினைவுகளுக்கு

யார் தைரியம் கொடுத்தது  ?

என் உறக்கத்தின் ஒவ்வொரு 

நொடியையும் கலைக்க .

Thursday, December 24, 2009





ஏனோ உன் நினைவுகள்

என் உதட்டோரம்

சிரிப்பாய் மலர்கிறது.




முதல் முறையாக என் அலைப்பேசி  மீது

கோபம் கொண்டேன்....

என் கன்னங்கள் பெற வேண்டியதை

அது  பெற்றதால் ...............



என் உலகில் இரவை

இருள் மட்டும் சூழவில்லை ……… 

உன் நினைவுகளும் .




இறந்த என் பேனா

மீண்டும் உயிர் பெற்றது …

உனக்காக.
.



உன் கரங்களால் என்னை தீண்டாதே … 

உன் உதடுகளுக்கு எட்டும் தொலைவில்

நானிருக்கையில்.



நான் இடும் குங்குமம்...


என் நெற்றியை விட 


உன் உதடுகளில் அழகாக உள்ளது
.



வேண்டுமென்றே எதுத்து சென்ற

ஒரு சிறிய குடையில் ....

இருக்கமாக நிற்கையில்,

தவறி என்னை தீண்டிய

 அந்த ஒரு துளி மீது சினம் கொண்டான் .




இன்னும் வேண்டுமென்று கேட்க 

என் நானம் தான் தடுக்கிறது......

நான் அல்ல என்று

அழகாக உணர்ந்து

என்னை அள்ளி எடுத்து

மூச்சடைக்க அணைத்தான் .



ணைந்த கரங்களோடு 


நம் பாதங்களும் இணைவதேன்றோ ?
  



பல ஒரே ஒரு முத்தம் பெற்றும்

இன்னும் ஒரே முத்தத்திற்காக

 ஏங்கும் என் உதடுகள் .



பார்க்கும் என் கண்களை மூடாமல்

அவள் தேகத்தை மூடினேன் .....

என் தேகம் கொண்டு.

Wednesday, December 23, 2009




பேருந்தில் நடத்துனர்

"இன்னொரு பயணசீட்டு யாருக்கு" என கேட்டார்.

பிறகே உணர்ந்தேன்....

நான் தனியாக பயனிக்கிறேன் என...

புன்ன்கையித்தேன் தோழியே........

கண்கள் ஈரமாக
.



மலரே மென்மை என்றேன்...

அவள் இதழ்களை முத்தமிடும் வரையில்
.




நீ எல்லை மீறவே

நான் எல்லையை உணர்த்தினேன்
.



என்னை ரசிக்கும்

என் ரசிகனே …..

நானும் உன் ரசனைக்கு ரசிகையாநேன் .



அணைக்க வரும் என் கரங்களை

பொய்யாய் தடுக்கும் உன் கரம் ….

மெய்யாய் அழைக்கும் உன் விழிகள் .…




வள்ளுவன் நாவைத்தான்

அடக்கச் சொன்னான் …

உதடுகளை அல்ல …

உடனே முத்தமிடு.


தெளிவாக கேட்டும் , கேட்கவில்லை என்றேன் …. 

நெருங்கி வந்து சொல்வாய் என …
.



உன் இருதயத்துடிப்பின் ஒலியே


என்  தாலாட்டு .






நீ தாங்கவே,

நான் தடுக்கி விழுந்தேன்.




ஏனோ என் பேனா

அவள் பெயரை மட்டும்

எழுத மறுக்கிறது ,

அதற்க்கு சலித்துவிட்டது போலும் .